நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஐக்கிய முச்சக்கர வண்டி உரிமையாளர் கூட்டுறவு சங்க கூட்டமும், வருடாந்த இப்தார் நிகழ்வும் சங்கத்தின் செயலாளர் பி.எம்.முஹினுடீனின் வழிகாட்டலில் சங்கத்தின் தலைவர் யூ.கே.நவாஸ் (நியாஸ்) அவர்களின் தலைமையில் சாய்ந்தமருதில் திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக கல்முனை தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட் மற்றும் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.முத்தஸ்ஸிர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். தலைவரின் சார்பில் சங்க கணக்காய்வாளர் எஸ்.பஸ்லூன் அவர்களினால் தலைமை உரை மற்றும் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டு அதனை தொடர்ந்து வருடாந்த இப்தார் நிகழ்வும் இராப்போசன வைபகமும் நடைபெற்றது.