சமல் ராஜபக்ஷ கைது செய்யப்படலாம்

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது திஸ்ஸமஹாராமவில் உள்ள அவரது வீடு மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன எனத் தவறான தகவலை அளித்துள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதற்காக அரசிடம் இருந்து ஒரு கோடியே 50 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் சமல் ராஜபக்ஷ விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *