திருகோணமலையில் பெரும்போக நெல் அறுவடை விழா

திருகோணமலை மாவட்ட உப்பு வெளி கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் ஒன்றினைந்த விவசாய அமைப்புக்களின் பெரும்போக நெல் அறுவடை விழா (17) முத்து நகர் வயல் நில பகுதியில் இடம் பெற்றது.

இதனை குறித்த பகுதியில் இயங்கி வரும் விவசாய அமைப்புக்களான தகரவெட்டுவான், முத்து நகர், மத்திய வெளி ஆகிய விவசாய சம்மேளனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதன் போது பெரும் போக நெல் அறுவடை இடம் பெற்றதுடன் பாரம்பரிய விவசாய கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன. நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன கலந்து சிறப்பித்ததுடன்

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், உப்புவெளி கமநல சேவைகள் நிலைய உத்தியோகத்தர்கள்,தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *