ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்
சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாசாலையில் இன்று (15)ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் இவ் இப்தார் சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.
மேலும் இவ் இப்தார் நிகழ்வில் உலமாக்கள், நிருவாகத்தினர்,ஆலுனர் சபை உறுப்பினர்கள், மற்றும் ரஹ்மத் பவுண்டேசன் முக்கியஸ்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.