ஜனாதிபதியால் புதிய செயலாளர்கள் நியமனம்!

புதிய ஜனாதிபதி செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறையில் கௌரவப் பட்டம் பெற்றுள்ள குமாநாயக்க, ஜப்பானின் National Graduate Institute for Policy Studies (GRIPS) நிறுவனத்தில் அபிவிருத்தி பொருளாதாரம் தொடர்பான கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளதோடு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் அரச பொருளியல் தொடர்பில் (Public Economics) முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.

கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 52 (I) பிரிவின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உப சரத்து 52 (1) இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக டி.டபிள்யூ. ஆர். பி. செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *