உண்மையில் இதுதான் சிஸ்டம் சேஞ்சா?

NPP ஆட்சியின் நடைமுறை, வாக்குறுதிகள், மற்றும் நம் எதிர்பார்ப்புகள்!

1. 20வது திருத்தம்

2. PTA (பயங்கரவாத தடுப்புச் சட்டம்)

2024ஆம் ஆண்டு, இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது.

தேசிய மக்கள் சக்தி (NPP), பல ஆண்டுகளாக நாட்டில் நிலவிய அதிகார மையமற்ற, மக்கள் சார்ந்த ஆட்சியை உருவாக்கும் எண்ணத்துடன், பெரிய அளவில் மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தது.

அந்த நம்பிக்கையின் வழியில், மக்கள் உரிமைகள், சட்ட ஆட்சி, மற்றும் ஜனநாயகத்தின் உறுதி என்பவை NPP-வின் தேர்தல் பிரச்சாரத்தின் அடிப்படைக் குரல்களாக இருந்தன. குறிப்பாக, 20வது அரசியல் திருத்தம் மற்றும் PTA (பயங்கரவாத தடுப்புச் சட்டம்) ஆகியவற்றுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை NPP முன்வைத்தது.

வாக்குறுதிகள் வாசகமா, நடைமுறையா?

20வது திருத்தம் குறித்து, கடந்த ஆண்டுகளில் NPP தெளிவாகக் கூறியது:

“இந்தத் திருத்தம் ஜனநாயகத்தின் தூண்களை உடைக்கும். ஜனாதிபதி அதிகாரம் அதிகரிக்கும் ஒரு ஆபத்தான சட்டம் இது.”

அதேபோல, PTA குறித்தும்:

“PTA என்பது ஒரு நீண்ட கால பீதியின் சட்டம். இதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மனித உரிமைகள் அதன் காரணமாக பாதிக்கப்படுகின்றன.”

இவை மக்களின் மனதில் நம்பிக்கையை உருவாக்கின. ஆனால் இன்று, ஆட்சியின் நடைமுறையில் அதே சட்டங்களை தொடர்ந்து பயன்படுத்தும் சூழ்நிலை ஒரு வினாவை எழுப்புகின்றது.

இவை மாற்றமா, அல்லது தொடரும் பழைய நடைமுறைதானா?

1. 20வது திருத்தம்

நீக்கப்படும் என நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால், இன்றளவும் அந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட விசாரணையற்ற அதிகாரங்கள் தொடர்கின்றன.

2. PTA (பயங்கரவாத தடுப்புச் சட்டம்)

சட்ட ரீதியான சீர்திருத்தம் இல்லை.

எதிர்க்கப்பட்ட சட்டமே இன்று NPP ஆட்சியின் கீழ் பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்திய PTA சம்பவங்கள் – சிந்திக்க வைக்கும் நிகழ்வுகள்

முகமது ருஸ்தி (2025)

“F*** Israel” ஸ்டிக்கர் ஒட்டியதற்காக கைது.

PTA சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவல்.

பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மனோகரன் கஜேந்திரூபன் (2024)

மாவீரர் நினைவேந்தல் சம்மந்தப்பட்ட சமூக ஊடக பதிவுகள் காரணமாக கைது.

யாழ்ப்பாணம் மற்றும் தமிழர் சமூகத்தில் கவலையூட்டும் எதிர்வினை.

முன்னைய அரசுகளில் NPP-வின் எதிர்ப்பு நிலை

அஹ்னாப் ஜசீம், 2020ல் கவிதைத் தொகுப்பு காரணமாக கைது செய்யப்பட்டவர்.

அவர் மீது PTA பயன்படுத்தப்பட்டது.

அப்போது NPP:

“கவிதையை பயங்கரவாதமாக கருதுவது ஜனநாயக விரோத செயல்,”

என விமர்சித்தது.

இன்று, அதே சட்டத்தைதான் தாங்கள் பயன்படுத்துவதை மக்கள் எவ்வாறு புரிந்து கொள்வார்கள்?

மாற்றத்தின் வாக்குறுதி இதுவா?– மக்களிடைக் கேள்வி

NPP அரசு, மிகுந்த நம்பிக்கையுடன் ஏற்படும் மாற்றம் ஒன்றாக வந்தது.

ஆனால், மக்கள் கொடுத்த வாக்குகளுக்குப் பிரதிபலனாக, 20வது திருத்தம் நீக்கப்படாமல் தொடர்வதும், PTA சட்டம் தொடர்ந்து செயல்படுவதும், கடந்த கால ஆட்சி நடைமுறைகளுக்கே திரும்புவதாக அமையுமா?

இந்த நிலைமை ஒரு அரசின் நேர்மை அல்லது செயல் திறனைக் கேள்விக்குள்ளாக்கும் அல்லவா; மாறாக, மக்களாகிய நாமும் நம் அரசியலமைப்பியல் நம்பிக்கைகளை மீள சிந்திக்க வேண்டிய தருணமாக இருக்க முடியுமா?

வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளா?

ஒரு ஆட்சி புதியதாக இருக்கலாம். ஆனால் அதன் நடவடிக்கைகள் பழையதை ஒத்திருக்கக் கூடாது.

20வது திருத்தம் மற்றும் PTA தொடர்பான வாக்குறுதிகள், அரசியல் உரைகளில் மட்டும் இருந்து விடாமல், நடைமுறையிலும் உருவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அரசியலுக்கு மரியாதை நிச்சயம் இருக்க வேண்டும்.

அதே சமயம், மக்கள் கேட்கும் உரிமையும் இருக்க வேண்டும்:

நீங்கள் வாக்களித்த அரசியல் இயக்கம் இப்போது என்ன செய்கிறது?

உங்கள் நம்பிக்கையை அது காக்கின்றதா, தாக்கு -கின்றதா?

மாற்றத்தை நாம் உண்மையாகவே பெற்றோமா, அல்லது மற்றொரு மறுபெயரிலான தொடர்ச்சியா?

மேற்கோள்கள்:

Vidivelli.lk – ருஸ்தி சம்பவம்

The Morning – PTA நிலைப்பாடு மற்றும் விமர்சனங்கள்

Amnesty International – PTA மீதான சர்வதேச விமர்சனம்

#niasfasmir

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *