களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலை தாதிஉத்தியோகஸ்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்.

jkhdufuu

 மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிஆதார வைத்தியாசலையில் பணிபுரிகின்ற தாதி உத்தியோகஸ்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துபதாகைகளை ஏந்தியவாறு திங்கட்கிழமை(17.03.2025) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தாதியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில்சரியான நீதியைப் பெற்றுக்கொடு, சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரம் குறைக்கப்பட்டது என்?உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு திங்கட்கிழமை நண்பல் 12.30 மணியளவில்வைத்தியசாலையின் நிருவாக சேவைகளுக்கும், வைத்தியசேவைகளுக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு இவ்வாறு தாத்தி உத்தியோகஸ்த்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

அரச தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கத்தின்களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் செயலாளர் ஏ.ஜி.எம்.நசூஹான், அரச தாதியர் உத்தியோகத்தர்கள்சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திருமதி.வ.புவிதர், உள்ளிட்ட தாதியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.  

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *