துப்பாக்கி மற்றும் வாள்களுடன் பெண்ணொருவர் கைது.

kijhiushdsdx

வீடு ஒன்றில் இருந்து 02 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் 02 வாள்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண் நேற்று (22) இரவு ஹபராதுவ பொலிஸ் பிரிவின் வெல்லேகேவத்த பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண், வெல்லேகேவத்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டபோது, ​​வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, 2 பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் 2 வாள்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லேகேவத்த போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *