2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அட்டாளைச்சேனை பிரதேச வேட்பாளர்க்கான கலந்துரையாடல்.

ஏ.எஸ்.எம்.அர்ஹம் 

நிருபர் 

அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் நேற்று(15) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமாகிய எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் அட்டாளைச்சேனை ஹனீபா ஹாஜியார் பீச் ரிசோட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் உச்ச பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயலாளருமான ஏ.சி.சமால்தீன், தொழிலதிபர் ஏ.கே.அமீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இக்ராஃ வட்டார வேட்பாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ்(Ex.MPS), ஜும்மா பள்ளி வட்டார வேட்பாளர் ஏ.எல்.பாயிஸ்(ADE), அல்முனீறா வட்டார வேட்பாளர் றியா மசூர் (Ex.MPS), அறபா வட்டார வேட்பாளர் ஐ.எல்.அஸ்வர் சாலி, புறத்தோட்ட வட்டார வேட்பாளர் ஏ.சி.நியாஸ், தைக்கா நகர் வட்டார வேட்பாளர் எஸ்.எம்.றியாஸ் , அட்டாளைச்சேனை மத்திய குழு, தேர்தல் குழு, கிளைக்குழு, இளைஞர் குழுக்களின் உறுப்பினர்களும் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *