அரச தாதியர் சங்கத்தினர் இன்று களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் போராட்டம்!

fdgfhggf

2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளதையடுத்து , 

இதனடிப்படையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி தாம் எதிர்ப்பினை முன்னெடுத்ததை அவதானிக்க முடிந்தது.

இன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இந்தப் போராட்டம் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மேலதிக நேர வரம்பு பிரச்சினையை முன்வைத்து இன்று கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் , பதாகைகளை ஏந்தியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *